பதிவு செய்த நாள்
10 டிச2021
01:13
புதுடில்லி:வீடுகள் விலை, அடுத்த ஆண்டில் 5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக, ஏற்ற – இறக்கங்கள் நடப்பு ஆண்டில் அதிகம் இருப்பினும், அடுத்த ஆண்டில் வணிகம் மற்றும் குடியிருப்பு பிரிவுகள், நிலையான வளர்ச்சி சூழலை காணும் என எதிர்பார்க்கலாம்.
வீடுகள் பிரிவை பொறுத்தவரை, தற்போதைய வளர்ச்சி போக்கு, அடுத்த ஆண்டி லும் தொடரும் எனஎதிர்பார்க்கலாம்.உயர் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் என பல விஷயங்களால், கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தது.
இறுதியாக கொரோனா தொற்றால் மேலும் பாதிப்படைந்தது.கடந்த 10 ஆண்டுகளில், தேவைகள் மற்றும் வினியோகம் ஆகியவை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. அந்த வகையில், 2022ம் ஆண்டில், 5 சதவீதம் அளவுக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|