குறுந்தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் குறுந்தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் ...  அமேசான்  விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு அமேசான் விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு ...
நிறுவனங்களில் துணிகர முதலீடு நவம்பரில் இரு மடங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
21:39

மும்பை:கடந்த நவம்பரில், துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்திய நிறுவனங்களில், 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, இரு மடங்கு அதிகம்.புதிய வர்த்தகங்களுக்கு, துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை நிதியுதவி செய்கின்றன. இடர்பாடு அதிகம் உள்ள இத்தகைய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, வளர்ச்சிப் பாதையில் தொழில் துறை செல்வதை குறிக்கிறது எனலாம்.
இது குறித்து எர்னஸ்ட் யங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த நவம்பரில், துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை, 102 ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய நிறுவனங்களில், 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இது, 2020, நவ.,ல் மேற்கொள்ளப்பட்ட, 26 ஆயிரம் கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகம். எனினும், அக்.,ல் திரட்டப்பட்ட 98 ஆயிரம் கோடி ரூபாயை விட குறைவாகும். நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில், ஏப்ரல் – நவம்பர் வரை 5 லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய்க்கு இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது, 2020ம் ஆண்டின் சாதனை முதலீட்டை விட, 53 சதவீதம் அதிகம்.நவம்பரில், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.17 ஒப்பந்தங்களில், தலா, 750 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடர்ந்து, மின்னணு வர்த்தக நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘என்கோரா டிஜிட்டல்’ நிறுவனத்தில், ‘அட்வென்ட்’ செய்த, 11ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு; ‘டிரீம் 11’ நிறுவனத்தில் ‘பால்கன் எட்ஜ், டி.பி.ஜி.,’ உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்ட, 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை எனலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)