பதிவு செய்த நாள்
18 ஜன2022
21:05
புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், ‘ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
ஆட்வெர்ப் டெக், உள்நாட்டை சேர்ந்த, ‘ரோபோட்டிக்’ நிறுவனமாகும்.இது குறித்து, ஆட்வெர்ப் டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கீத் குமார் கூறியதாவது: நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாயில், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இதனையடுத்து, அதிக அளவிலான பங்கு களை கொண்ட பங்குதாரராக, ரிலையன்ஸ் மாறியுள்ளது.
இருந்த போதிலும், நிறுவனம், முன்பு போலவே தனியாகவே செயல்படும். ரிலையன்ஸ் முதலீடு செய்திருக்கும் தொகையை, வெளிநாட்டிலும் வணிகத்தை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும்.மேலும், மிகப் பெரிய தொழிற்சாலையை நொய்டாவில் அமைக்கவும் பயன்படுத்தப்படும்.நிறுவனத்துக்கு, ஏற்கனவே நொய்டாவில் ஆலை உள்ளது. அங்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரோபோட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளது. அதன் ‘ஜியோ மார்ட்’ நிறுவனத்தின் மளிகை பொருட்கள் வணிகத்துக்கு தேவையானவற்றை செய்து தந்துஉள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆட்வெர்ப் நிறுவனம், கடந்த 2016ல் துவங்கப்பட்டதாகும். கடந்த நிதியாண்டில் வருவாய் 200 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இருமடங்காக அதிகரித்து, 400 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|