பதிவு செய்த நாள்
25 ஜன2022
09:47
மும்பை : பங்குச் சந்தை வர்த்தகத்தில், கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் மோசமான நாளாக, நேற்று அமைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' 1,546 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' 17 ஆயிரத்து, 200 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது.அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, உலக சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.
மேலும், சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்களுடைய முதலீட்டை தொடர்ந்து வெளியே எடுத்தது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை குறைத்தது. இதுவும் இந்த சரிவுக்கு காரணமாக அமைந்தது.
சென்செக்ஸ் பிரிவில் இருக்கும் 30 நிறுவன பங்குகளும் நேற்று விலை சரிவை சந்தித்தன. பஜாஜ் பைனான்ஸ் அதிக இழப்பை சந்தித்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நேற்று மட்டும் 68 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தை கண்டுள்ளது.
உலகளவில் ஐரோப்பிய, ஆசிய சந்தைகளும் நேற்று சரிவை கண்டுள்ளன. டோக்கியோ சந்தை மட்டும் சற்று உயர்வை கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|