பதிவு செய்த நாள்
09 மே2022
06:44
வட்டி விகித உயர்வால் வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பதை திறம்பட சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரத்துவங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ விகிதத்தை, 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்கடன் பிரிவில் நிலவி வந்த குறைவான வட்டி விகித சூழல் மாறி, வட்டி விகிதம் உயர உள்ளது. ரெப்போ உயர்வுக்கு ஏற்ப வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு நீடிக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 200 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயரலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.கடன் விகித முறைவட்டி விகித உயர்வு கடன் சுமையை அதிகரிக்கும் என்றாலும், அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவது போன்ற உத்திகளை பின்பற்றுவதன் மூலம், கடன் சுமையின் பாதிப்பை குறைக்கலாம். கடன் சுமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், முதலில் கடனுக்கான வட்டி விகித முறையை அறிந்து கொள்ள வேண்டும். வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க, எம்.சி.எல்.ஆர்., ரெப்போ விகிதம் உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற விகிதத்தை அளவீடாக பயன்படுத்துகின்றன. கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகான கடன்கள் பெரும்பாலும் ரெப்போ விகிதத்தை அளவீடாக கொண்டுள்ளன. அதற்கு முன் பெறப்பட்ட கடன்கள் எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை கொண்டிருக்கலாம்.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ‘பிரைம் லெண்டிங்’ விகிதத்தை அளவீடாக கொண்டுள்ளன. கடனுக்கான அளவீடு விகிதத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் அமைகிறது. பொதுவாக ரெப்போ விகிதத்தை அளவீடாக கொண்ட கடன்கள் குறைவான வட்டி விகிதம் கொண்டுள்ளன. ஆனால் வங்கிகள் மட்டுமே இதை வழங்குகின்றன. அதிக தவணைஎனவே வட்டி விகிதத்தை அலசி ஆராய்ந்து, தற்போதைய சூழலில் வட்டி உயர்வு எந்த அளவு பாதிக்கும் என பார்க்க வேண்டும். ஏற்கனவே அதிக வட்டி விகிதம் கொண்டிருந்தால், குறைந்த வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும், பழைய மாதத்தவணையையே தொடர்வது நல்லது. இதன் மூலம் கடனுக்கான காலத்தை குறைக்கலாம். இதே போல, கணிசமான தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் கூடுதல் மாதத்தவணை உண்டாவதை தவிர்க்கலாம். மேலும், கடன் தொகையை முன்னதாகவே திட்டமிட்டு அடைக்கும் வழியையும் பின்பற்றலாம். ஓராண்டுக்கு ஒரு முறை 5 சதவீத அசலை அடைப்பது எனும் உத்தியை பின்பற்றலாம். இந்த முறையில், 20 ஆண்டு கடனை 12 ஆண்டுகளில் அடைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.வட்டி விகித உயர்வு காரணமாக மாதத்தவணையை உயர்த்தாமல், கடனுக்கான காலத்தை அதிகரிக்கும் வாய்ப்பையும் வங்கிகள் வழங்கலாம். இதனால் தவணை சுமை அதிகரிக்காது என்றாலும், கடனுக்கான காலம் அதிகரிப்பதோடு, செலுத்த வேண்டிய வட்டித்தொகையும் அதிகரிக்கும். எனவே, கூடுதல் தவணையை சமாளிக்க முடியும் என்றால், கடன் காலத்தை நீட்டிக்காமல் இருப்பதே சரியாக இருக்கும். வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பது, சேமிப்பு, முதலீடு, குழந்தைகள் கல்விக்கான முதலீடு ஆகியவற்றை பாதிக்கும் என்பதால், வட்டி விகித உயர்வை எதிர்கொள்ள சரியாக திட்டமிடுவது அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|