பதிவு செய்த நாள்
10 மே2022
20:58
புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களாகவே, அன்னிய முதலீட்டாளர்கள், தொடர்ந்து தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.ஏப்ரலில், நிதி சேவைகள் துறையிலிருந்து 12 ஆயிரத்து 891 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறையில் 8,579 கோடி ரூபாய் முதலீட்டை எடுத்துள்ளனர்.
இருப்பினும், உடல் ஆரோக்கியம், நுகர்பொருட்கள், வாகனம் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.ஏப்ரலை தொடர்ந்து, நடப்பு மே மாதத்திலும் முதலீடுகளை தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர்.மே மாதத்தின் முதல் 5 வர்த்தக நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 35 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம், வங்கிகளில் உயர்த்தப்பட்டு வரும் வட்டி, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த சந்தைகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம், உக்ரைன் போர் ஆகியவை காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, பிற வளரும் சந்தைகளில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|