பதிவு செய்த நாள்
11 மே2022
20:47
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்று விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, 21 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக, எல்.ஐ.சி.,யின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் பொருட்டு, கடந்த 4ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வந்தது. 9ம் தேதியுடன் நிறைவடைந்த இந்த பங்கு வெளியீட்டின்போது, பங்குகள் கோரி 2.95 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பங்கு வெளியீட்டின் போது முதலீடு செய்தவர்களுக்கு, இன்று பங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு ஒதுக்கீடுகள் முடிவடைந்த பின், 17ம் தேதியன்று, எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியல்இடப்படும்.
இந்திய பங்குச் சந்தைகள், அன்னிய முதலீட்டாளர்களை நம்பி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்த பங்கு வெளியீட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பாலிசிதாரர்களும், ஊழியர்களும் அதிகளவில் இந்த பங்கு வெளியீட்டில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|