பதிவு செய்த நாள்
11 மே2022
20:53
ரிசர்வ் வங்கியே காரணம்
ரிசர்வ் வங்கியின் மறைமுக அழுத்தத்தால் தான், இந்தியாவில் தங்களுடைய ‘கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சேவை’ செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக, ‘காய்ன்பேஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரைம் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இதன் சேவைகளை கடந்த ஏப்ரல் 7ல் துவங்கிய நிலையில், அடுத்த மூன்றாவது நாளிலேயே செயல்பாடுகளை இந்நிறுவனம் நிறுத்திக் கொண்டது.
ஒரு மணி நேரத்தில் விற்பனை
‘வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு துவங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நேற்று முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டு விட்டது.இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 165 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்குகள் விலை, 310 – 326 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிர்வாக இயக்குனர்
தேசிய பங்குச் சந்தையின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் நடவடிக்கையில், இப்பதவியில் தற்போது இருக்கும் விக்ரம் லிமாயே, துவக்கத்திலிருந்தே கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.விக்ரம் லிமாயே பதவிக் காலம் ஜூலை 16ல் முடிவடைகிறது.
பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்
‘பிரிஸ்டைன் லாஜிஸ்டிக்ஸ் அண்டு இன்ப்ரா புராஜெக்ட்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.பங்கு வெளியீட்டின் போது, 250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; பங்குதாரர்களின் இரண்டு கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
வாகன வினியோகம் பாதிப்பு
தொழிற்சாலையிலிருந்து பயணியர் வாகனங்களை முகவர்களுக்கு வினியோகிப்பது, கடந்த ஏப்ரலில் 4 சதவீதம் சரிவை கண்டிருப்பதாக, வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.வாகனக் கடனுக்கான வட்டி அதிகரித்து வருவதை அடுத்து, தேவையில் எத்தகைய பாதிப்பு இருக்கும் என்பதை, வாகன தயாரிப்பாளர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|