பதிவு செய்த நாள்
20 மே2022
20:53
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கி, தன்னிடமிருக்கும் ‘ஏஜஸ் பெடரல் லைப் இன்சூரன்ஸ்’ எனும் கூட்டு நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும், 580 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.
தன்னிடம் உள்ள 20 கோடி பங்குகளையும், ஏஜஸ் இன்சூரன்ஸ் இன்டர்நேஷனல் என்.வி., நிறுவனத்துக்கு விற்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, கூட்டு நிறுவனத்திடமிருந்து முற்றிலும் விலகுகிறது, ஐ.டி.பி.ஐ., வங்கி. ‘ஏஜஸ் பெடரல் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கி, பெடரல் வங்கி மற்றும் ஏஜஸ் இன்சூரன்ஸ் இன்டர்நேஷனல் என்.வி., ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.
ஐ.டி.பி.ஐ., வங்கி, எல்.ஐ.சி.,யின் கட்டுபாட்டில் உள்ள வங்கியாகும்.பங்குகளை விற்பதற்கான பணிகள், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்குள் முற்றுப்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|