பதிவு செய்த நாள்
26 மே2022
20:35
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி அமைப்பது குறித்த நடவடிக்கைகள் தாமதமாகும் என தெரிகிறது.
உலக பொருளாதார, அரசியல் நிலவரங்கள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.எனவே, இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை மாற்றி அமைப்பது சரியாக இருக்காது என அதிகாரிகள் தரப்பிலிருந்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை அதன் விகிதங்கள் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகள் உடையதாக உள்ளது.
இந்த நான்கு அடுக்கு வரி அமைப்பை, மூன்று அடுக்கு கொண்டதாக மாற்றுவது குறித்த எண்ணத்தில் அரசு இருக்கிறது.ஆனால், வரி அடுக்கை மூன்றாக குறைக்கும்பட்சத்தில், சில பொருட்களின் விலை குறையும்; சிலவற்றின் விலை அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல பொருட்கள் விலை அதிகரிப்பது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.எனவே, பணவீக்கம் கட்டுக்குள் வந்த பின், வரி அடுக்கை மாற்றும் முயற்சியில் அரசு இறங்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|