விசைத்தறி ஜவுளி ஏற்றுமதியில் சுணக்கம்விசைத்தறி ஜவுளி ஏற்றுமதியில் சுணக்கம் ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது ...
"சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
10:22

தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும், ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலையில், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய விலைப் பட்டியலும் தயார் நிலையில் உள்ளதால், எந்த நேரமும் விலை உயர்த்தப்படலாம் என டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில், 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
21 ஆயிரம் கோடி இலக்கு: தமிழகம் முழுவதும் செயல்படும், 6,900க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூலம், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, 2012 -13ம் நிதி ஆண்டில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஜூன் 14ம் தேதி முதல் பீர் விலையில், ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களான பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு பட்டியல் தயார்: அதற்கான விலைப் பட்டியலும் தயார் செய்யப்பட்டு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மூலம் முதல்வரிடம் அனுமதியும் வாங்கப்பட்டு விட்டது. இதனால், இன்று முதல் ஜூலை11ம் தேதிக்குள் எந்நேரமும் புதிய விலை பட்டியல்படி சரக்குகளின் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விலைப் பட்டியலின் படி தற்போது, 65, 75, 85, 95 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து குவார்ட்டர் பாட்டில்களின் (180 மி.லி.,) விலையும் இனி, 70, 80, 90, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். "ஆப்' பாட்டில்களின் (375 மி.லி.,) விலையில், ஐந்து ரூபாயில் முடியும் அனைத்து சரக்குகளின் விலையில், 15 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 10 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. இதே போல், "புல்' பாட்டில்களின் (750 மி.லி.,) விலையைப் பொறுத்தவரை, ஐந்து ரூபாயில் முடியும் சரக்குகளின் விலையில், 25 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 20 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. உயர்ரக மதுபானங்களான, "ஸ்காட்ச்' சரக்குகளின் விலையில், 45 ரூபாய் முதல், 125 ரூபாய் வரையில் உயர்வு செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஐந்து ரூபாய் விலையை உயர்த்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், இனி அனைத்து சரக்குகளின் விலையும் இரட்டை இலக்கம், அதாவது 70, 80, 90 ரூபாயில் முடியும் வகையில் விலைப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரக்கு விலையில் அவற்றின் பழைய விலையில் இருந்து குறைந்த பட்சம், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரையில், அளவைப் பொறுத்து உயர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)