தங்கம் விலையில் ஏற்றம்! - சவரனுக்கு ரூ.464 உயர்வுதங்கம் விலையில் ஏற்றம்! - சவரனுக்கு ரூ.464 உயர்வு ... உணவு தானிய உற்பத்தி குறையவில்லை : அமைச்சர் தாமஸ் பேட்டி உணவு தானிய உற்பத்தி குறையவில்லை : அமைச்சர் தாமஸ் பேட்டி ...
எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
13:43

புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஆன்-லைன் டிக்கெட் புக்கிங் செய்ய, இணையதளம் வசதி, ஸ்மார்ட் போன் இருந்தால் தான் பெற முடியும்.

இப்போது, மொபைல் போன்களை இந்தியா முழுவதும், 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான். சாதாரண மக்களும், ஆன்-லைனில் புக்கிங் செய்யும் வகையில், மொபைல் போனில் இருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துவக்கி வைத்துள்ளது. எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவு சேவையை நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்ஜூன கார்கே துவக்கி வைத்தார்
.
அப்போது அவர் கூறியதாவது: வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, முன்பதிவு மையங்களுக்கு வந்து, வரிசையில் காத்து இருக்கின்றனர். இதனால், ஒரு நாள் சம்பளத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்டர்நெட் வசதியில்லாத, மொபைல் போன்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை துவக்கியுள்ளோம். இதை அமல்படுத்துவதில் உள்ள சங்கடங்கள் படிப்படியாக குறைக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி.,யின் ஆன்-லைன் புக்கிங் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு, 45 சதவீதம் நடக்கிறது. இன்டர்நெட் வசதி இந்தியாவில், 10 சதவீதம் தான் உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர், 80 சதவீதம் உள்ளதால், எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவுக்கு, அதிக வரவேற்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

எஸ்.எம்.எஸ்., டிக்கெட் புக்கிங் குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., சேர்மன் ராகேஷ் டான்டன் கூறியதாவது: இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர், முதலில் ஐ.ஆர்.சி.டி.சி.,யில் தங்கள் மொபைல் போன் எண்ணை அனுப்பி, பதிவு செய்து கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு வங்கி அளிக்கும், "மொபைல் மணி அடையாள' எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்ட்டையும் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக, 139 மற்றும் 5676714 எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)