பதிவு செய்த நாள்
13 ஜூலை2013
00:08
மும்பை:சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), 7.60 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலாண்டில், 8.53 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
ஆக,மதிப்பீட்டு காலாண்டில்,சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, 10.90 சதவீதம் சரிவை கண்டுள்ளது என,கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கம்ப்யூட்டர் சந்தையின் வரலாற்றில்,நீண்ட காலத்திற்கு பின்,தற்போது தான், தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக, இவற்றின் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
ஆசிய பசிபிக் சந்தையிலும், கம்ப்யூட்டர் விற்பனை, தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக குறைந்து வருகிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க சந்தைகளில், இதன் விற்பனை, தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக, மிகவும் சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், கம்ப்யூட்டர் விற்பனையில், லெனோவா நிறுவனம், எச்.பி., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, 16.7 சதவீத சந்தை பங்களிப்புடன் (1.27 கோடி கம்ப்யூட்டர்கள்) முதலிடத்தை பிடித்துள்ளது. எச்.பி., நிறுவனம், 16.3 சதவீத சந்தை பங்களிப்புடன்(1.24 கோடி கம்ப்யூட்டர்கள்) இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை யடுத்து, டெல் (89.80 லட்சம் கம்ப்யூட்டர்), ஏசர் (63 லட்சம்), ஏசஸ் (45 லட்சம் கம்ப்யூட்டர்கள்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|