சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை11 சதவீதம் சரிவடைந்ததுசர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை11 சதவீதம் சரிவடைந்தது ... இந்திய நிறுவனங்களின் இணைத்தல் நடவடிக்கை 1,090 கோடி டாலரை எட்டியது இந்திய நிறுவனங்களின் இணைத்தல் நடவடிக்கை 1,090 கோடி டாலரை எட்டியது ...
சமையல் எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
00:16

புதுடில்லி:உலகளவில், சமையல் எண்ணெய் இறக்குமதியில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. உள்நாட்டில், போதிய அளவிற்கு, சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், இதனை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.
சாகுபடி பரப்பளவு :இந்நிலையில், நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை பொழிவு சிறப்பாக உள்ளது. இதனால், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து, சமையல் எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது என, அரசு துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சோயா, பட்டாணி, கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள பருவத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி, 3.07 கோடி டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், அது, உள்நாட்டு எண்ணெய் தேவையை, ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் என்பதுடன், புண்ணாக்கு ஏற்றுமதியும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எதிர்பார்த்த அளவிற்கு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இருக்கும் நிலையில், அது, பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும்.
உலகளவில், சமையல் எண்ணெய் பயன்பாட்டில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது, நம்நாடு, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து, அதிகளவில் பாமாயிலையும், அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து, சோயா எண்ணெயையும் இறக்குமதி செய்து கொள்கிறது.
புள்ளிவிவரம்:கடந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி வரையிலான 12 மாத காலத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 99 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 18 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு எண்ணெய் பருவத்தில், மே மாதம் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 10 சதவீதம் அதிகரித்து, 62 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)