பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
03:26
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமைஅன்று மிகவும் மோசமாக இருந்தது. ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக குறையும் என்ற மதிப்பீட்டை வெளியிட்டது.மேலும், ரிசர்வ் வங்கி, "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களையும் குறைக்கவில்லை. இது போன்ற காரணங்களால், "சென்செக்ஸ்', 1.25 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 244.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,348.34 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,672.72 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,328.54 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், விப்ரோ, ஜிந்தால் ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி,' 76.60 புள்ளிகள் சரிவடைந்து, 5,755.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,861.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,747.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|