பதிவு செய்த நாள்
01 ஆக2013
00:04
புதுடில்லி: கிராமப்புறங்களில், வீட்டுக்கு ஒரு இலவசமொபைல் போன் என்ற திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப் படுத்த முடிவு செய்துள்ளது.கடந்த பொதுத் தேர்தலின் போது, இத்திட்டம் குறித்து,பரவலாக பேசப்பட்டது.ஆனால், இது நடைமுறைக்கு வரவில்லை.
அடையாள சின்னம்:இந்நிலையில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும், இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முடிவு செய்துள்ளது."பாரத் மொபைல் திட்டம்' என்ற இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவருக்கு, குறிப்பாக, ஒரு பெண்மணிக்கு, இலவசமொபைல் போன் வழங்கப்படும்.இதனை,சமையல் எரிவாயு மானியம், உதவித் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டப் பயன்களை பெறுவதற்கு, அக்குடும்பத்தார் அடையாளச் சின்னமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இலவச"செல்போன்' பெறுவதற்கு, அந்த குடும்பத்தில், யாராவது ஒருவர், கடந்த 2012ம் ஆண்டில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும்.இதன்படி, ஒவ்வொரு கிராமம், வட்டம், மாவட்ட அளவில், தகுதியான நபர்களை கண்டறிந்து, பட்டியல் தயாரித்து அனுப்புமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு, அறிக்கை அனுப்பியுள்ளது.
நிதியம்:குக்கிராமங்களிலும், தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், "சமச்சீர் சேவை உதவி' என்ற நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், அவற்றின் அனைத்து இனங்கள் நீங்கலான, மொத்த வருவாயில், 5சதவீதத்தை வழங்கி வருகின்றன.இந்த நிதியத்தில் தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது. இத்தொகையைக் கொண்டு, இலவசமொபைல் போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|