பதிவு செய்த நாள்
01 ஆக2013
00:00
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனங்கள், அயல்நாடுகளில் அதிக அளவில் முதலீடுகளை திரட்டிக் கொள்ளும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை மேலும் தளர்த்தப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
அவர், அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 5.5 - 6சதவீதமாக உயரும். நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, அத்தியாவசியமற்ற ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், அன்னிய வர்த்தக கடனுக்கான விதிமுறைகளை தளர்த்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட், அயல்நாட்டு அரசு நிதியங்கள், மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் வாயிலாக முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.ரூபாய் மதிப்பை நிலை நிறுத்துவதற்கான இலக்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. இருந்த போதிலும், அதன் ஏற்ற, இறக்கத்தையும், ஊக வணிகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|