பதிவு செய்த நாள்
01 ஆக2013
09:45
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சில நாட்களாக சரிவில் இருந்த வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.76 புள்ளிகள் அதிகரித்து 19474.46 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.90 புள்ளிகள் அதிகரித்து 5776.90 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய் 78 காசாக இருந்தது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேசநிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தன.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. அதேசமயம், உலோகம், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|