பதிவு செய்த நாள்
11 செப்2013
01:36
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு உயர்வு மற்றும் சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் நிலையில், அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தாது என்ற, பாரக் ஒபாமாவின் அறிவிப்பு போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ‹டுபிடித்து காணப்பட்டது.இதையடுத்து, "சென்செக்ஸ்', 3.77 சதவீத உயர்வுடனும், "நிப்டி' 3.81 சதவீத அதிகரிப்புடனும் முடிவடைந்தன.
கடந்த, 17 மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற ஜூலையில், சீனாவின் தொழில்துறை உற்பத்தி வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், மருந்து, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 727.04 புள்ளிகள் அதிகரித்து, 19,997.10 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தக்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,012.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,444.66 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டீஸ், எஸ்.பீ.ஐ., மற்றும் டி.சி.எஸ் ஆகிய, மூன்று நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 216.35 புள்ளிகள் உயர்ந்து, 5,896.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,904.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,738.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|