பதிவு செய்த நாள்
12 செப்2013
00:42
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 140 காசுகள் உயர்ந்து, 63.84 ஆக அதிகரித்தது.நேற்று ரூபாய் மதிப்பு,மேலும்,47 காசுகள் அதிகரித்து, 63.37ல் நிலை கொண்டதுநேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்த கத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 63.75 ஆகமேலும் உயர்ந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிக பட்சமாக 63.07 வரையும், குறைந்தபட்சமாக, 63.90 வரையும் சென்றது.
ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால், சிரியா மீதுபோர் தொடுக்க மாட்டோம் என்ற, அமெரிக்காவின் அறிவிப்பு, சர்வதேச நிதிச் சந்தைக்கு ஊக்கமளித்து உள்ளது. இதன் தாக்கத்தால், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளும் ரூபாய் மதிப் பின் உயர்விற்கு வலுச்சேர்த்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|