பதிவு செய்த நாள்
12 செப்2013
00:43
மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், அயல்நாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,),இந்தியாவில்மேற்கொண்ட டெபாசிட், 666கோடி டாலராக (39,960கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில், 741கோடி டாலராக (44,460கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இறுதி வரையிலுமாக, என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியாவில்மேற்கொண்ட, ஒட்டு மொத்த டெபா சிட், 7,300கோடி டாலராக (4.38 லட்சம்கோடி ரூபாய்) இருந்தது. கணக்கீட்டு காலத்தில்,அயல்நாடு வாழ் இந்தி யர்கள், ரூபாய் அடிப்படையில் மேற்கொள்ளும் டெபாசிட், 640கோடி டாலராக குறைந்ததுதான்,ஒட்டு மொத்த அளவில் என்.ஆர்.ஐ., டெபாசிட் குறைந்துபோனதற்கு காரணம் என, ரிசர்வ் வங்கிமேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|