பதிவு செய்த நாள்
24 ஏப்2014
01:10
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும் சரிவடைந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 60.78ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 31 காசுகள் குறைந்து, 61.09ஆக வீழ்ச்சி கண்டது. கடந்த ஒரு மாதத்திற்குப் பின், நேற்று தான் ரூபாய் மதிப்பு, 61ஐ தாண்டி முடிவடைந்தது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.87ஆக இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 61.12 வரை சரிவைக் கண்டது.
சர்வதேச செலாவணிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் டாலரை வாங்கி வருகின்றன.வங்கிகளுக்கான டாலர் தேவையும் அதிகரித்து உள்ளது. இது போன்ற காரணங்களால், டாலர்மதிப்பு உயர்ந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|