'எர்டிகா' லிமிடெட் எடிஷன் கார் வந்தாச்சு !'எர்டிகா' லிமிடெட் எடிஷன் கார் வந்தாச்சு ! ... இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர் இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’ கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
10:21

இந்திய சாலைகளில் ஓடும் கார்களின், பாதுகாப்பு கட்டமைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய உதவும், ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற சோதனை முறையை, கட்டாய மாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், ஏராளமான வௌிநாட்டு கார் நிறுவனங்கள், உள்நாட்டு கார் நிறுவனங்கள், பல்வேறு இடங்களில், கார் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இந்த கார்கள், பாதுகாப்பு கட்டமைப்பு கொண்டது, எந்த விதமான விபத்து சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தது என்றே நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால், இந்தியாவில், வாகன விபத்துக்களில் உயிர் இழப்போர் என்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்தே, ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற நடைமுறையை, கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வரும், 2017 ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள், இந்தியாவில் அமைக்கப்படும், ‘கிராஷ் டெஸ்ட்’ மையத்தில், சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது.
இதற்கு, கார் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில், இரண்டு விஷயங்களை குறிப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. முதலாவதாக, இந்தியாவில், ‘கிராஷ் டெஸ்ட்’ மேற்கொள்ளும் மையமே இல்லை என்பது அவர்களின் வாதம். இரண்டாவதாக, இத்தகைய சோதனையை மேற்கொண்டால், கார்களின் விலை, 25 சதவீதம் உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த எதிர்ப்பை, மத்திய அரசு ஏற்கவில்லை. வரும் டிசம்பருக்குள், மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரிலும், அரியானா மாநிலம் குர்காவ் அருகில் உள்ள மனேசர் நகரிலும், இந்த மையம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
‘கிராஷ் டெஸ்ட்’ சோதனை முறையில், பல்வேறு வகைகள் உள்ளன. இதில், காரின் முன்பகுதியை, மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் இயக்கி, ஒரு தடுப்பின் மீது மோதி காரின் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்வது, முக்கியமான சோதனையாகும். இந்த சோதனை மையம் தான், இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது.
இத்துடன், மத்திய அரசு தரப்பில், முக்கிய வாதம் ஒன்று முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு நிறுவனங்களின் கார்கள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த கார்கள், ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது சாத்தியம் என்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களையும், இந்த சோதனைக்கு உட்படுத்த கூடாது என்றே அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளின் தரப்பில் கேட்ட போது, ‘ கார் உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சாலையில் பிடிமானம் இல்லாமல், கார் வழுக்கி கொண்டே சென்று விபத்து ஏற்படுவது, அதிக வேகத்தில் செல்லும் போது, கார் கன்ட்ரோல் இழப்பினால் விபத்து ஏற்படுவது, ஆகிய பிரச்னைகளை குறைக்கும் வகையில், கார்களில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துவது குறித்து, அவர்களுடன் பேசப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)