பதிவு செய்த நாள்
15 செப்2014
13:21
புதுடில்லி : காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை சரிந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் சரிந்துள்ளது. நரேந்திர மோடியின் அரசு பதவியேற்றதில் இருந்தே நாட்டின் வளர்ச்சி பாதைக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பணவீக்கம் குறைய தொடங்கியது, அதுமட்டுமின்றி கடந்தமாதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் 3.74 சதவீதமாக சரிந்துள்ளது. ஜூலையில் இது 5.15 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இது 8.43 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்துளளது குறிப்பிடத்தக்கது. காய்கறி மற்றும் உணவு பணவீக்கம் சரிந்ததால் பணவீக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக காயகறிகளின் பணவீக்கம் 4.88 சதவீதமாக சரிந்துள்ளது. அதிலும் வெங்காயம் விலை 44.7 சதவீதமும், உருளைகிழங்கு விலை 61.61 சதவீதத்தில் இருந்து 46.61 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போல் பழங்களின் விலை 20.31 சதவீதம் சரிந்துள்ளது. முட்டை, மாமிசம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் 12.18 சதவீத்தில் இருந்து 7.81 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் வெளியான சில்லரை வர்த்தக பணவீக்கம் 7.96 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|