பதிவு செய்த நாள்
16 செப்2014
00:34
குன்னுார் :தேயிலை ஏற்றுமதி குறைந்து வருவதால், உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.பாகிஸ்தான்நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், குன்னுாரில் உள்ள அரசு மற்றும் ‘சிடிடிஏ’ தேயிலை ஏல மையங்கள் மூலம், விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல மையங்களில், கடந்த சில மாதங்களாக, தேயிலை துாள் விற்பனை குறைந்து வருவதுடன், விலையும் சரிந்து வருகிறது.இங்குள்ள தேயிலை பாகிஸ்தான், ரஷ்யா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவில், தற்போது உறைபனி தாக்குதல் அதிகரித்துள்ளதால், அங்கு தரைவழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால், வரும் வாரங்களில் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை துாளின் அளவு, குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால், இந்திய தேயிலை துாளை அங்கு கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருமானம் சரிவுஇந்நிலையில், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 2 நாட்கள் நடந்த ஏலத்தில், மொத்தம் 10.50 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கிலோ ஒன்றுக்கு, 71 ரூபாய் சராசரி விலையாக இருந்தது. இதன் மூலம், 7.46 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.நடப்பாண்டில், இதுவரை நடந்த, 37 ஏலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருமானம் மிகவும் குறைவு. ஏற்றுமதி வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், போட்டி ஏற்படவில்லை. எனவே, ‘உள்நாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க, தேயிலை வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, தேயிலை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|