தங்கம் விலை ரூ.56 அதிகரிப்புதங்கம் விலை ரூ.56 அதிகரிப்பு ... தேயிலை ஏற்றுமதி குறைவால் பாதிப்பு  உள்நாட்டு வர்த்தகத்தை உயர்த்த கோரிக்கை தேயிலை ஏற்றுமதி குறைவால் பாதிப்பு உள்நாட்டு வர்த்தகத்தை உயர்த்த ... ...
ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 3.74 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2014
13:21

புதுடில்லி : காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை சரிந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் சரிந்துள்ளது. நரேந்திர மோடியின் அரசு பதவியேற்றதில் இருந்தே நாட்டின் வளர்ச்சி பாதைக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பணவீக்கம் குறைய தொடங்கியது, அதுமட்டுமின்றி கடந்தமாதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் 3.74 சதவீதமாக சரிந்துள்ளது. ஜூலையில் இது 5.15 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இது 8.43 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்துளளது குறிப்பிடத்தக்கது. காய்கறி மற்றும் உணவு பணவீக்கம் சரிந்ததால் பணவீக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக காயகறிகளின் பணவீக்கம் 4.88 சதவீதமாக சரிந்துள்ளது. அதிலும் வெங்காயம் விலை 44.7 சதவீதமும், உருளைகிழங்கு விலை 61.61 சதவீதத்தில் இருந்து 46.61 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போல் பழங்களின் விலை 20.31 சதவீதம் சரிந்துள்ளது. முட்டை, மாமிசம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் 12.18 சதவீத்தில் இருந்து 7.81 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் வெளியான சில்லரை வர்த்தக பணவீக்கம் 7.96 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)