பதிவு செய்த நாள்
17 செப்2014
23:52
மும்பை :தொடர்ச்சியாக பெரும் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள், நேற்று ஏற்றம் கண்டன.குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி, தலா, 0.52 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 138.78 புள்ளிகள் அதிகரித்து, 26,631.29 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாக்டர் ரெட்டீஸ், இன்போசிஸ், டாட்டா பவர் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, கோல் இந்தியா உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 42.60 புள்ளிகள் உயர்ந்து, 7,975.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|