பதிவு செய்த நாள்
18 செப்2014
00:03
புதுடில்லி: பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மென்பொருள் துறை நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, முன் எப்போதும் இல்லாத வகையில், 29,688 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்து வரும் மொத்த சொத்து மதிப்பில், 10.53 சதவீதமாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், இந்த முதலீடு, 27,596 கோடி ரூபாயாக இருந்தது.எனினும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதல் விருப்பத் தேர்வாக, வங்கித் துறை உள்ளது.
வங்கி பங்குகளில், இத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, கடந்த ஆக., மாத நிலவரப்படி, 56,600 கோடி ரூபாயாக உள்ளது.இவைகளையடுத்து, மருந்து (19,394 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (17,754 கோடி), நிதி (15,116 கோடி) ஆகிய துறைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|