பதிவு செய்த நாள்
18 செப்2014
00:05
புதுடில்லி:சாகுபடி பரப்பளவு குறைந்துள்ள நிலையிலும், வரும் 2014 – 15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 5 சதவீதம் அதிகரித்து, 2.55 கோடி டன்னாக உயரும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான, ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
பயன்பாடுஇதையடுத்து, தொடர்ந்து 5 ஆண்டுகளாக, சர்க்கரை உற்பத்தி, பயன்பாட்டை (2.30 – 2.40 கோடி டன்) காட்டிலும், விஞ்சி நிற்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.செற்கைக்கோள் மதிப்பீட்டின்படி, தற்போதைய, கரும்பு சாகுபடி பரப்பு, 52.90 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, ஒரு சதவீதம் மட்டுமே குறைவாகும்.
இதன்படி, வரும் 2014 – 15ம் பருவத்தில், மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தி, 20 சதவீதம் அதிகரித்து, 93 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மகாராஷ்டிராஇதே போன்று, கர்நாடகாவிலும் இதன் உற்பத்தி, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மகாராஷ்டிராவில், இதன் உற்பத்தி, 65 லட்சம் டன்னிலிருந்து, 60 லட்சம் டன் னாக குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.சர்க்கரை உற்பத்தியில், பிரேசிலுக்கு அடுத்த படியாக, இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.நடப்பு சந்தைப் பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|