பதிவு செய்த நாள்
24 செப்2014
02:48
சென்னை: சென்னை அடுத்த ஆவடியில், ரெப்கோ வங்கி, அதன் 101வது கிளையை அமைத்துள்ளது. இதை, சென்னை, மியூசிக் அகாடமியில் இருந்து, கவர்னர் ரோசய்யா, காணொலி காட்சி மூலம், நேற்று, துவக்கி வைத்தார்.இதில், ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் வரதராஜன் பேசியதாவது:இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியா திரும்பியவர்களுக்கு, கடன் உதவி வழங்க, மத்திய அரசு, கடந்த, 1969ல், ரெப்கோ வங்கியை துவக்கியது.வங்கியின் இயக்குனர் குழு, வங்கிக்கு, ‘மொத்த வர்த்தகம், 10 ஆயிரம் கோடி ரூபாய்; நிகர லாபம், 100 கோடி ரூபாய்; கிளைகள், 100’ என, இலக்கு நிர்ணயித்தது. தற்போது, இந்த இலக்குகளை தாண்டி, வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், ரெப்கோ வங்கி தலைவரும், தமிழக மறுவாழ்வு துறை செயலருமான ஜிதேந்திரநாத் ஸ்வெயின், மறுவாழ்வு துறை ஆணையர் ஆனந்த், ரெப்கோ வங்கி இயக்குனர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|