அன்னிய முதலீட்டிற்காக கட்டுமான துறை விதிமுறைகள் தளர்வுஅன்னிய முதலீட்டிற்காக கட்டுமான துறை விதிமுறைகள் தளர்வு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.01 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.01 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி சென்செக்ஸ் 431 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
02:53

மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான பங்கு ஒப்பந்த முடிப்பு காலம் நெருங்குவதையடுத்து, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா 1.58 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும், சரிவுடன் முடிவடைந்தன.குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.91 சதவீதம் வீழ்ச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 431.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,775.69 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.அதேசமயம், என்.டி.பி.சி., இந்துஸ்தான் யூனிலிவர், மாருதி மற்றும் ஐ.டி.சி., ஆகிய நான்கு நிறுவனப் பங்குகள் மட்டும் விலை உயர்ந்து காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி,’ 128.75 புள்ளிகள் சரிவடைந்து, 8,017.55 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)