பதிவு செய்த நாள்
24 செப்2014
02:53
மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான பங்கு ஒப்பந்த முடிப்பு காலம் நெருங்குவதையடுத்து, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா 1.58 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும், சரிவுடன் முடிவடைந்தன.குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.91 சதவீதம் வீழ்ச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 431.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,775.69 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.அதேசமயம், என்.டி.பி.சி., இந்துஸ்தான் யூனிலிவர், மாருதி மற்றும் ஐ.டி.சி., ஆகிய நான்கு நிறுவனப் பங்குகள் மட்டும் விலை உயர்ந்து காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி,’ 128.75 புள்ளிகள் சரிவடைந்து, 8,017.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|