பதிவு செய்த நாள்
18 அக்2014
23:31
புதுடில்லி:உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, சென்ற செப்டம்பரில், 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58.22 லட்சமாக அதிகரித்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 45.55 லட்சமாக இருந்தது என, உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.,) தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, விமான பயணிகள் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதாக, டி.ஜி.சி.ஏ.,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மதிப்பீட்டு மாதத்தில், விமான பயணிகளை அதிகளவில் கையாண்டதில், குறைந்தகட்டண சேவை நிறுவனமான இண்டிகோ முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற செப்டம்பரில், 19.07 லட்சம் பயணிகளை கையாண்டு, 28 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் (9.72 லட்சம்), ஏர் – இந்தியா (9.67 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் முறையே, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.உள்நாட்டு விமான பயணிகளை அதிகளவில் கையாண்டதில், கடந்த ஆறு மாதங்களாக, முன்னணியில் இருந்து வந்த ஏர் –இந்தியா நிறுவனத்தை, மதிப்பீட்டு மாதத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்ற செப்டம்பரில், விமானச் சேவை நிறுவனங்கள், 58.50 லட்சத்தை பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கியுள்ளன. மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, 10 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்குள்ளானதாக, டி.ஜி.சி.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|