பதிவு செய்த நாள்
20 அக்2014
01:17
சேலம்:தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால், கொத்தமல்லி விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வயல் வெளிகளிலும், கொத்தமல்லி பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களிலும், நீர் தேங்கி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புயல் காரணமாகவும், தமிழகத்திற்கான, கொத்தமல்லி வரத்து கடுமையாக சரிந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, தினம் தோறும் சராசரியாக, 5,000 டன் கொத்தமல்லி இலை விற்பனைக்கு வரும். இது தற்போது, 1,500 டன்னாக வீழ்ச்சி கண்டு உள்ளது.கடந்த மாதம் வரை, 200 கிராம் எடை கொண்ட கொத்த மல்லி கட்டு உழவர் சந்தைகளில், 10 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெளிமார்க்கெட்டில் கொத்தமல்லி இலை கட்டு, 15 ரூபாய்க்கு விற்றது, 30 ரூபாய்க்கும், கிலோ, 120 – 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொத்தமல்லி இலை விலை மேலும் உயரக்கூடும் என,வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|