தொழில் துறை உற்பத்தி 2.5 சதவீதமாக வளர்ச்சிதொழில் துறை உற்பத்தி 2.5 சதவீதமாக வளர்ச்சி ... எம்.எப்.,களின் கடன்பத்திர முதலீடு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது எம்.எப்.,களின் கடன்பத்திர முதலீடு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது ...
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 39 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2014
05:04

மும்பை: நடப்பாண்டின், மூன்றாவது காலாண்டில் (ஜூலை – செப்.,), இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, அளவின் அடிப்படையில், 39 சதவீதம் அதிகரித்து, 225.10 டன்னாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டின் இதே காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 161.60 டன்னாக இருந்தது என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு காலாண்டில், தங்கத்திற்கான தேவை மதிப்பின் அடிப்படையில், 31 சதவீதம் உயர்ந்து, 42,830 கோடி ரூபாயிலிருந்து, 56,219 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.கணக்கீட்டு காலாண்டில், இந்தியாவில் ஒட்டு மொத்த ஆபரணங்களுக்கான தேவை, 60 சதவீதம் அதிகரித்து, 115 டன்னிலிருந்து, 183 டன்னாக உயர்ந்துள்ளது.இது, மதிப்பின் அடிப்படையில், 51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 30,347 கோடியிலிருந்து, 45,682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், உலகளவில் தங்கத்திற்கான தேவை, நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், 2 சதவீதம் சரிவடைந்து, 953 டன்னிலிருந்து 929 டன்னாக குறைந்துள்ளது.இதே போன்று, சர்வதேச அளவில் ஆபரணங்களுக்கான தேவையும், 4 சதவீதம் குறைந்து, 556 டன்னிலிருந்து, 534 டன்னாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவில், ஆபரணங்களுக்கான தேவை, 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், பொருளாதாரம், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையடுத்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில், ஆபரணங்கள் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, டபிள்யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது. ஆபரணங்கள் துறையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கையில், வரி குறைப்பு மற்றும் விதிமுறைகளில் தளர்வு உள்ளிட்ட, எந்த சலுகைகளையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.எனினும், கணக்கீட்டு காலாண்டில், தீபாவளி பண்டிகை காரணமாக, வழக்கம் போல ஆபரணங்களுக்கான தேவை உயர்ந்துள்ளது என, டபிள்யூ.ஜி.சி.,யின் நிர்வாக இயக்குனர் (இந்தியா) சோமசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)