பதிவு செய்த நாள்
14 நவ2014
05:04
மும்பை: நடப்பாண்டின், மூன்றாவது காலாண்டில் (ஜூலை – செப்.,), இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, அளவின் அடிப்படையில், 39 சதவீதம் அதிகரித்து, 225.10 டன்னாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டின் இதே காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 161.60 டன்னாக இருந்தது என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு காலாண்டில், தங்கத்திற்கான தேவை மதிப்பின் அடிப்படையில், 31 சதவீதம் உயர்ந்து, 42,830 கோடி ரூபாயிலிருந்து, 56,219 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.கணக்கீட்டு காலாண்டில், இந்தியாவில் ஒட்டு மொத்த ஆபரணங்களுக்கான தேவை, 60 சதவீதம் அதிகரித்து, 115 டன்னிலிருந்து, 183 டன்னாக உயர்ந்துள்ளது.இது, மதிப்பின் அடிப்படையில், 51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 30,347 கோடியிலிருந்து, 45,682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், உலகளவில் தங்கத்திற்கான தேவை, நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், 2 சதவீதம் சரிவடைந்து, 953 டன்னிலிருந்து 929 டன்னாக குறைந்துள்ளது.இதே போன்று, சர்வதேச அளவில் ஆபரணங்களுக்கான தேவையும், 4 சதவீதம் குறைந்து, 556 டன்னிலிருந்து, 534 டன்னாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவில், ஆபரணங்களுக்கான தேவை, 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், பொருளாதாரம், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையடுத்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில், ஆபரணங்கள் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, டபிள்யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது. ஆபரணங்கள் துறையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கையில், வரி குறைப்பு மற்றும் விதிமுறைகளில் தளர்வு உள்ளிட்ட, எந்த சலுகைகளையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.எனினும், கணக்கீட்டு காலாண்டில், தீபாவளி பண்டிகை காரணமாக, வழக்கம் போல ஆபரணங்களுக்கான தேவை உயர்ந்துள்ளது என, டபிள்யூ.ஜி.சி.,யின் நிர்வாக இயக்குனர் (இந்தியா) சோமசுந்தரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|