இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 39 சதவீதம் அதிகரிப்புஇந்தியாவில் தங்கத்திற்கான தேவை 39 சதவீதம் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.71 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.71 ...
எம்.எப்.,களின் கடன்பத்திர முதலீடு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2014
05:06

புதுடில்லி :பரஸ்பர நிதி நிறுவனங்கள் (எம்.எப்.,), சென்ற அக்டோபர் மாதத்தில், கடன்பத்திர சந்தையில், 31,917 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.இதையடுத்து, இந்நிறுவனங்கள் கடன்பத்திர சந்தையில் மேற்கொண்ட முதலீடு நிகர அளவில், 5,27,435 கோடி ரூபாயை எட்டியுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், இந்த முதலீடு, 5.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பாண்டில் இதுவரையில், கடன்பத்திரங்களில், மேற்கொண்ட நிகர முதலீடு, 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல், பெரும்பாலான துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இவை, பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என்ற நிலைப்பாட்டாலும், அதிக வட்டி விகிதம் காரணமாகவும், கடன்பத்திர சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்ற அக்டோபரில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில், 5,900 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. தொடர்ந்து ஐந்து மாதங்களாக, பங்கு சந்தையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து வருகின்றன.நடப்பாண்டில் இதுவரையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட மொத்த நிகர முதலீடு, 14 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)