பதிவு செய்த நாள்
14 நவ2014
05:06
புதுடில்லி :பரஸ்பர நிதி நிறுவனங்கள் (எம்.எப்.,), சென்ற அக்டோபர் மாதத்தில், கடன்பத்திர சந்தையில், 31,917 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.இதையடுத்து, இந்நிறுவனங்கள் கடன்பத்திர சந்தையில் மேற்கொண்ட முதலீடு நிகர அளவில், 5,27,435 கோடி ரூபாயை எட்டியுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், இந்த முதலீடு, 5.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பாண்டில் இதுவரையில், கடன்பத்திரங்களில், மேற்கொண்ட நிகர முதலீடு, 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல், பெரும்பாலான துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இவை, பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என்ற நிலைப்பாட்டாலும், அதிக வட்டி விகிதம் காரணமாகவும், கடன்பத்திர சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்ற அக்டோபரில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில், 5,900 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. தொடர்ந்து ஐந்து மாதங்களாக, பங்கு சந்தையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து வருகின்றன.நடப்பாண்டில் இதுவரையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட மொத்த நிகர முதலீடு, 14 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|