பதிவு செய்த நாள்
27 டிச2014
12:15
கோவை : மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகையால், கோவை மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் தொழில் வளர்ச்சிக்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று கோவை வருகிறார். காலை திருப்பூரில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை அவிநாசி ரோடு, 'லீ மெரீடியன்' ஓட்டலில், தமிழகத்தை சேர்ந்த ஆறு ஜவுளி உற்பத்தி தொழில் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் பங்கேற்கிறார். ஜவுளி உற்பத்தி கட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார நிபுணர்களை கொண்டு தயாரித்த ஜவுளித்தொழில் 'வாய்ப்புகளும்-சவால்களும்' என்ற ஆய்வறிக்கை, அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜவுளி உற்பத்தித்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், 250க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையினர் தங்களின் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மத்தியில் பா.ஜ., கட்சி ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்துள்ள, 'மேக் இன் இந்தியா' திட்டம் தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரின் வருகை, கோவை மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் தொழில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.”தினமலர்' இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு : செய்திகளை, வாசகர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ், இணைய தளம் சேவையையும் அளித்து வருகிறது. கோவையில் ஆறு ஜவுளி உற்பத்தி தொழில் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சி, www.dinamalar.com என்ற இணைய தளத்தில், நேரடி ஒளிபரப்பாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|