பதிவு செய்த நாள்
29 ஜன2015
17:05
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் இறுதியில் உயர்வுடன் முடிந்தன. கடந்த சில நாட்களாக பங்குசந்தைகள் உச்சத்தை தொட்டன. இதனால் முதலீட்டாளர்கள் லாபம்நோக்கத்தோடு பங்குகளை காலையில் விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து பங்குசந்தைகள் சரிவுடன் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்தன. இதன்காரணமாக இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்ததோடு சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.59 புள்ளிகள் உயர்ந்து 29,681.77–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 38.05 புள்ளிகள் உயர்ந்து 8,952.35–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், டாக்டர் ரெட்டி 3.74 சதவீதமும், எச்டிஎப்சி., 3.42 சதவீதமும், பெல் 2.96 சதவீதமும், ரிலையன்ஸ் 2.43 சதவீதமும், ஐடிசி., 2.10 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.42 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|