பதிவு செய்த நாள்
22 மார்2016
08:18
மும்பை : இந்தியாவைச் சேர்ந்த ஸ்விசெரா லேப்ஸ் நிறுவனம் தயாரித்த, டி.பி., நோய்களுக்கான மருந்து பொருட்களை, உலக சுகாதார அமைப்பு, தடை விதித்துள்ளது.வளரும் நாடுகளுக்கு, ஸ்விசெரா லேப்ஸ் என்ற இந்திய நிறுவனம், அதிக மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம், குறைந்த விலையில் விற்கப்படும் ஜெனரிக் ரக மருந்துப் பொருட்களை தயாரிக்கிறது. ஸ்விசெரா நிறுவனம், மும்பையில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரித்த டி.பி., நோய்களுக்கான மருந்து பொருட்களுக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்து, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் போட்விஜின் புளூஸ் கூறுகையில், ‘டி.பி., மருந்துகளுக்கு தடை விதித்தது குறித்து, உலக சுகாதார அமைப்பிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை அந்நிறுவனம் ஏற்கவில்லை’ என்றார். இந்த தடை விதிப்பு, சர்வதேச அளவில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பெரும் பிரச்னையாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|