பதிவு செய்த நாள்
26 மார்2016
05:17
புதுடில்லி: சாம்சங் இந்தியா நிறுவனம், குறிப்பிட்ட சில மாடல் போன்களை, ‘ஆன்லைன்’ மூலமாக மட்டுமே விற்பனை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. போட்டி நிறுவனங்கள் சில, இந்தியாவில் இந்த முயற்சியை எடுத்து வெற்றி பெற்றிருக்கின்றன. இதையடுத்தே, சாம்சங் இந்த எண்ண மாற்றத்துக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.சாம்சங்கின் மொத்த விற்பனையோடு ஒப்பிடும்போது, ஆன்லைன் மூலமாக ஆகும் விற்பனை அளவு, மிகவும் குறைவுதான். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆன்லைனில் அதிகரித்து வருகிறது.
இளைஞர்கள், குறிப்பிட்ட சில வசதிகளை கொண்ட போன்களை, ஆன்லைன் மூலமாகவே வாங்க விரும்புகின்றனர். இதையடுத்து, பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைனுக்கு என, பிரத்யேக மாடல்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அந்த வரிசையில், தன்னையும் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது, சாம்சங்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|