பதிவு செய்த நாள்
01 மே2016
03:15
புதுடில்லி:இந்திய பெருநகரங்களில் மக்கள் அதிக அளவில் செலவு செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுவதால், நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7.6 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஐ.நா.,வின், ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான, பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன் ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவில், விலைவாசி கட்டுக்குள் இருப்பதால், பணவீக்கம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பணவீக்கம், 5.2 சதவீதமாக இருக்கும். நாட்டில், வேலை வாய்ப்பும் நிலையாக அதிகரித்து வருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அமலானால், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். இதனால், பணப்புழக்கம் அதிகரித்து, மக்கள் பலதரப்பட்ட கூடுதல் செலவினங்களை மேற்கொள்வர்.
இத்தகைய போக்கு, பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை தவறியதால், கிராமப்புற மக்களின் தேவை குறைந்தது. வறட்சியும் அதற்கு காரணமாக இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு, வழக்கத்தைவிட அதிகம் மழை பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேளாண் துறையின் வளர்ச்சி அதிகரிக்கும். வேளாண் பொருட்களின் தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளி குறையும் என, எதிர்பார்க்கப்படு கிறது.
இத்தகைய அம்சங்களின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்சசி, 7.6 சதவீதமாக இருக்கும் என, தெரிகிறது. இது, வரும், 2017–18ம் நிதியாண்டில், 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தாண்டு, பருவமழை நன்கு இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டிலேயே, 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டாலும், வியப்பதற்கில்லை. இந்தியாவின் பணவீக்கம், வரும் நிதியாண்டில், 5.6 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
பாதிப்பு:சீனாவின் பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் வட்டி உயரும் என்ற எதிர்பார்ப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வு, ஆகியவை, இந்தியாவை பாதிக்கும். சீனாவின் தேவை குறைந்துஉள்ளதால், அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதியும் சரிவடைய வாய்ப்புள்ளது.
– யுனெஸ்காப் அறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|