பதிவு செய்த நாள்
02 மே2016
00:14
மும்பை : கோடை வெயில் வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பைவாசிகளின் பிரியமான சுற்றுலா இடமாக ஆம்ஸ்டர்டாம் இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த கோடை காலத்தை சமாளிக்க, மும்பைவாசிகள் ஆம்ஸ்டர்டாமுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக, பயண தேடுதளமான ஸ்கைஸ்கேனர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகளவில், விமானங்கள், ஓட்டல்கள், வாடகைக் கார்கள் குறித்த தகவல்களை இலவசமாக அளித்து வருகிறது.இதுகுறித்து, இந்நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சுற்றுலாவுக்காக வெனிஸ் நகர் குறித்த தகவல்களைத் தேடுவது, 2015ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 118 சதவீதம் அதிகரித்திருக்கிறது. துபாய்க்கு செல்வது குறித்த தேடல், 64 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதுபோல, ஐரோப்பிய நகரங்களை நாடுவதும் தொடர்கிறது.இருப்பினும் துபாய்க்கான தேர்வு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|