பதிவு செய்த நாள்
02 மே2016
00:15
குருகிரம் : சீனாவில், வலைதளம் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில், அலிபாபா முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில், வலைதள வணிகம் மற்றும் பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டுள்ள, ஸ்நாப்டீல் மற்றும் பேடிஎம் நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. இருந்த போதிலும், அலிபாபா, நேரடியாக இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டு, கூட்டு நிறுவனங்களை தேடும் முயற்சியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அரியானாவில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அலிபாபா குழுமத்தின் துணை தலைவர் ஷி டோங்வெய், ‘இந்திய நிறுவனங்களுடன் அலிபாபா தொடர்ந்து இணைந்திருக்கும். வலைதளம், மொபைல்போன் அடிப்படையிலான வணிகத்துடன் மேலும் பல துறைகளிலும் அலிபாபா நிறுவனத்தின் முதலீடுகள் தொடரும்’ என, தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|