பதிவு செய்த நாள்
06 மே2016
10:07
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மே 6), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 160.06 புள்ளிகள் சரிந்து 25,102.15 புள்ளிகளாகவும், நிப்டி 38.55 புள்ளிகள் சரிந்து 7696.95 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்திருப்பதன் காரணமாகவே சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும் பங்குச் சந்தைகளின் சரிவிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. டிசிஎஸ், ஹீரோ மோடோகார்ப், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும், ஹடிஎப்சி, பார்தி ஏர்டெல், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|