பதிவு செய்த நாள்
08 மே2016
06:57
புதுடில்லி:பதஞ்சலி நிறுவனம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, நொறுக்குத் தீனிகள் தயாரிப்பில் நுழைவதால், குர்குரேவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்கிறது, பெப்சிகோ இந்தியா நிறுவனம்.பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதையடுத்து பெப்சிகோ நிறுவனம், தங்களுடைய, குர்குரே பிராண்டுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிறது.
இதுகுறித்து, பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின், சிற்றுண்டி பிரிவின் துணை தலைவரான பார்த்தோ சக்ரபர்த்தி கூறியதாவது: பதஞ்சலி நிறுவனத்தை, எங்களுக்கு போட்டியாகவே கருதவில்லை. அதன் பொருட்களால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பல்லாயிரக்கணக்கான பிராண்டுகளில், பதஞ்சலியும் ஒன்று அவ்வளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது குர்குரே.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|