பதிவு செய்த நாள்
08 மே2016
07:00
புதுடில்லி:மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, லோக்சபாவில் கூறியதாவது:தேசிய மாதிரி புள்ளியியல் அலுவலகத்தின், சமீபத்திய அறிக்கைப்படி, கிராமப்புறங்களில், 14.1 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில், 18.1 சதவீதத்தினரும், மருத்துவ காப்பீட்டு வசதி பெற்றுள்ளனர்.
கடந்த 2014 – 15ம் நிதியாண்டில், பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, காப்பீட்டு நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில், 28.80 கோடி பேர் இணைந்துள்ளனர். இதில், அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் அடங்கும். மொத்த மக்கள் தொகையில், 24 சதவீதத்தினர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். மத்திய அரசின், ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்தி பீமா யோஜனா’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு, மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன், அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. ஐந்து பேர் அடங்கிய குடும்பம், ஓராண்டில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு, மருத்துவ காப்பீட்டு வசதியை பெறலாம்.இத்திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் சேர்க்கப்பட்ட, 4.12 கோடி பேரில், 15 லட்சம் பேர், மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|