பதிவு செய்த நாள்
09 மே2016
07:31
பூமியில் இருந்து இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில், 40 சதவீதம், தென்னாப்ரிக்க சுரங்கங்களில் இருந்து பெறப்பட்டவை.வரலாற்றில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தை விட அதிக அளவிலான எக்கு, 2015ல், உலகில் ஒவ்வொரு மணி நேரத்திலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.தங்கம், பூமியில் மட்டும் அரிதானது அல்ல. ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் தங்கம் மிகவும் அரிதானது. இரும்பு அல்லது கார்பன் போல தங்கம், நட்சத்திரங்களுக்குள் உருவாவதில்லை.தங்கம் மிகவும் அடர்த்தியான உலோகம்.ஈயத்தை விட அதன் அடர்த்தி அதிகம். அதே நேரத்தில், ஒரு கிராம் தங்கத்தை, 165 மீட்டர் இழையாக்கலாம்.
தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:ஹால்மார்க் முத்திரை-, இது தரத்தின் அடையாளம். ஒரு கிராமிற்கான தங்கத்தின் விலை: நகரத்துக்கு நகரம் மாறுபடலாம். செய்கூலி மற்றும் சேதாரத்தின் அளவு, திரும்ப வாங்கிக் கொள்ளும் தன்மை மற்றும் விலை. ‘பில்’ கேட்டு வாங்கவும்.
அட்சய திருதியை முன்னிட்டு இன்று, தங்க இ.டி.எப்.,க்களை பரிவர்த்தனை செய்வதற்கான நேரம், இரவு, 7:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை அறிவித்துள்ளன. பங்குச்சந்தையின் வழக்கமான வர்த்தகம், மாலை முடிந்ததும், தங்க இ.டி.எப்., பரிவர்த்தனை, மாலை, 4:30 மணிக்கு துவங்கி இரவு, 7:00 மணி வரை நடைபெறும்.
தங்கம், சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. பண வீக்கத்திற்கு எதிராக தங்கம் பாதுகாக்க கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் தங்கம், எந்த வருமானத்தையும் தராதது; முதலீடு நோக்கில் முக்கிய குறையாக கருதப்படுகிறது. இதற்கு, தங்க இ.டி.எப்., விதிவிலக்கு. இவற்றின் மூலம் டிவிடெண்ட் பெறலாம். அரசின் தங்க பத்திரங்கள் மீதும் வட்டி அளிக்கப்படுகிறது. தங்க சேமிப்பு திட்டத்தில் தங்கத்தை டிபாசிட் செய்தும் வட்டி வருமானம் பெறலாம்.
பொதுவாக, நகைகளாக வாங்குவதே தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழியாக அமைகிறது. இந்தியாவில் திருமணம், பண்டிகைகள் மற்றும் அக் ஷய திருதியை போன்ற முக்கிய தினங்களில் தங்கம் வாங்கும் பழக்கம் இருக்கிறது.எனினும், நகைகள் தவிர, தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன. வங்கிகள், தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. இப்போது அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள், அரசால் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர, காதித வடிவிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இ.டி.எப்., எனப்படும் பத்திர வடிவிலும் வாங்கலாம். இவற்றை பரஸ்பர நிதிகள் போல் வாங்கி விற்கலாம். இந்திய அரசும் இப்போது, ரிசர்வ் வங்கி மூலம் தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|