தங்கமே தங்கம்:முதலீடு செய்யும் வழிகள்தங்கமே தங்கம்:முதலீடு செய்யும் வழிகள் ...   செலவு பழக்கத்தை வெல்லும் வழி செலவு பழக்கத்தை வெல்லும் வழி ...
என்.பி.எஸ்., திட்டம்:2 புதிய நிதிகள் அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2016
07:35

என்.பி.எஸ்., திட்­டத்தின் கீழ், இளம் வயது ஊழி­யர்கள் சம பங்­கு­களில் அதிக முத­லீடு செய்ய வழி­வ­குக்கும் வகையில், இரண்டு புதிய நிதிகள் அறி­முகம் செய்­யப்­பட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.என்.பி.எஸ்., திட்­டங்­களின் கீழ் சம பங்­கு­களில் அதிக அளவில் முத­லீடு செய்ய வழி­வ­குக்கும் இரண்டு புதிய நிதி­களை அறி­முகம் செய்ய, பென்ஷன் ஒழுங்­கு­முறை ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) உத்­தே­சித்­துள்­ளது. இதற்­கான வரைவு அறிக்­கையை ஆணையம் வெளி­யிட்டு, இது தொடர்­பான கருத்­து­களை கோரி­யுள்­ளது. எப்­படி செயல்­ப­டு­கி­றது?என்.பி.எஸ்., திட்டம், நிர்­ண­யிக்­கப்­பட்ட பங்­க­ளிப்பை கொண்ட ஓய்­வூ­திய திட்­ட­மாக இருக்­கி­றது; அரசு ஊழி­யர்­க­ளுக்கு இது கட்­டாயம். தனியார் துறையில் இருப்­ப­வர்கள், விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தேர்வு செய்து கொள்­ளலாம். இதில், 60 வயது வரை முத­லீடு செய்ய வேண்டும். 60 வயதில், 40 சத­வீத தொகைக்கு, ஓய்வூ­திய காப்­பீடு திட்­ட­மான, ‘ஆன்­யூ­விட்டி’ திட்­டத்தில் முத­லீடு செய்ய வேண்டும்.
என்.பி.எஸ்., திட்­டத்தை நாடு­ப­வர்கள், அதற்­கான பண்ட் மேனேஜர் நிறு­வ­னங்­களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். மூன்று வகை­யான நிதி­க­ளி­லி­ருந்து தேர்வு செய்ய முடியும். ‘ஸ்கீம் சி’-யில், அரசு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யலாம். ‘ஸ்கீம் ஜி’யில், அரசு பத்­தி­ரங்கள் அல்­லாத நிரந்­தர வரு­மானம் தரும் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யலாம். ‘ஸ்கீம் ஈ’-யில், சம பங்­கு­களில் முத­லீடு செய்­யலாம். எனினும் சம பங்­கு­களில் அதி­க­பட்­ச­மாக, 50 சத­வீதம் அள­வுக்கு மட்­டுமே முத­லீடு செய்­யலாம்.இந்த மூன்று நிதி­களில் எந்­த­தெந்த அளவு முத­லீடு செய்­யலாம் என்­பதை முத­லீட்­டா­ளர்கள் தீர்­மா­னிக்­கலாம். இது, ‘ஆக்டிவ் சாய்ஸ்’ எனப்­ப­டு­கி­றது. அவ்­வாறு தீர்­மா­னிக்க முடி­யா­த­வர்கள், ‘ஆட்டோ சாய்ஸ்’ வாய்ப்பை தேர்வு செய்து கொள்­ளலாம். ‘லைப் சைக்கிள் பண்ட்’ எனப்­படும் இந்த நிதி, வாழ்க்கை சுழற்சி அடிப்­ப­டியில் செயல்­ப­டு­கி­றது. அதா­வது, இளம் வயதில் சம பங்­கு­களில் அதிக முத­லீட்டில் துவங்கி, பின் வயது ஆக ஆக, சம பங்கு முத­லீட்டின் அளவு குறைக்­கப்­பட்டு மற்ற பிரி­வு­களில் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. புதிய நிதிகள் உரு­வாக்கம் இப்­போது, இந்த லைப் சைக்கிள் நிதி பிரிவில் மேலும் இரண்டு புதிய நிதி­களை அறி­முகம் செய்ய, பென்ஷன் ஆணையம் திட்­ட­மிட்­டுள்­ளது. சம பங்­குகள் முத­லீடு வரம்பை, 50 சத­வீ­தத்தில் இருந்து உயர்த்தும் வகையில் இந்த மாற்றம் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.
இதன்­படி, ‘அக்­ரசிவ் லைப் சைக்கிள் பண்ட் மற்றும் கன்­சர்­வேட்டிவ் லைப் சைக்கிள் பண்ட்’ ஆகிய இரண்டு நிதி வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­படும். முதல் நிதியின் கீழ் ஒருவர், 75 சத­வீத தொகையை சம பங்­கு­களில் முத­லீடு செய்யும் வாய்ப்பு அளிக்­கப்­படும். அதா­வது, ஆரம்ப கட்­டத்தில் சம பங்கு முத­லீடு, 75 சத­வீ­த­மாக இருக்கும். பின், வய­துக்­கேற்ப குறைந்து கொண்டே வரும். ஓய்வு காலத்தில், 15 சத­வீ­த­மாக இருக்கும்.
இரண்­டா­வது நிதியில், ஆரம்ப கட்­டத்தில் சம பங்கு முத­லீடு, 25 சத­வீ­த­மாக இருக்கும். பின், இது ஓய்வு காலத்தில், 5 சத­வீ­த­மாக குறையும்.சம பங்கு வாய்ப்­பு­களை நாடும் விருப்பம் கொண்­ட­வர்­க­ளுக்கு வாய்ப்­பளிக்கும் வகையில் இந்த நிதிகள் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளன. 2014ம் ஆண்டில், பாஜ்பாய் குழு அறித்த அறிக்­கையில் சம பங்கு வாய்ப்பு, 75 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட வேண்டும் என குறிப்­பிட்­டு இ­ருந்­தது. அதை ஏற்றுக் கொண்டு பென்ஷன் ஆணையம், இந்த வரைவு திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.
என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பாஜ்பாய் குழு அறிக்கை பரிந்­து­ரைகள் படி, இத்திட்­டத்தில், தனியார் ஊழி­யர்­க­ளுக்கு நிக­ரான வாய்ப்­பு­களை அளிக்­கவும் பென்ஷன் ஆணையம் திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­கான வரைவு அறிக்­கை­யையும் வெளி­யிட்டு கருத்து கேட்­டுள்­ளது. இதன்­படி அரசு ஊழி­யர்கள் தங்­க­ளுக்­கான பென்ஷன் நிதி மேனே­ஜர்­களை தேர்வு செய்து கொள்ள அதிக வாய்ப்பு வழங்­கப்­படும். மேலும் சம பங்கு அளவை அதி­க­ரித்துக் கொள்­ளவும் வாய்ப்பு அளிக்­கப்­படும். தற்­போது அரசு ஊழி­யர்கள், 15 சத­வீதம் மட்­டுமே சம பங்­கு­களில் முத­லீடு செய்­யலாம்.சம பங்­கு­களில் முத­லீடு செய்யும் வாய்ப்பு அதி­க­ரிக்க இருப்­பது, என்.பி.எஸ்., திட்­டத்தை மேலும் பலன் மிக்­க­தாக மாற்றும் அதன் ஈர்ப்பை அதி­க­ரிக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)