பதிவு செய்த நாள்
24 மே2016
08:04
புதுடில்லி : அமெரிக்காவில், சுங்கத் துறைக்கு அதிக அதிகாரம் வழங்கும், வணிக வசதி மற்றும் வர்த்தக அமலாக்க சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களை முழுமையாக பரிசோதித்து, அவை, ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் என, கருதினால், அவற்றை தடை செய்ய முடியும். மேலும், இறக்குமதியாகும் பொருளுக்கு, அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளதா, அவை, குழந்தை தொழிலாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்டவையா என்பதும் ஆராயப்படும். சட்ட விரோத பணப் பரிமாற்றம், லஞ்சம் உள்ளிட்ட தவறான வழிகள் மூலம், பொருட்கள் தயாரானதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஆய்வு மற்றும் ஆவணங்களில் திருப்தி இல்லாத பட்சத்தில், பொருட்களின் இறக்குமதிக்கு, அமெரிக்க சுங்கத் துறை தடை விதிக்கும்.இந்த சட்டத்தால், தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உதாரணமாக, நகை ஏற்றுமதியாளர்கள், அந்த நகைகளை செய்வதற்கு வாங்கிய தங்கம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். அது, கடத்தல் தங்கமா, இல்லையா என்பதை ஏற்றுமதியாளர் ஆய்வு செய்வதென்பது சுலபம் அல்ல. ஜவுளி துறையிலும், பல கட்டங்களாக ஆடைகள் தயாரிப்பு தொழில் நடைபெறுகிறது. அவற்றில், குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, இல்லையா என்பதை, ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் உறுதிப்படுத்த முடியாது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|