பதிவு செய்த நாள்
24 மே2016
08:03
டெக்ரான் : ‘‘ஈரானில் உள்ள, ‘சாபஹார்’ தடையற்ற வர்த்தக மண்டலத்தில், அலுமினியம் முதல் உரம் வரை பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க, இந்தியா, ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும்,’’ என, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இந்தியா, ஈரானில், சாபஹார் துறைமுகத்தை அமைத்து, நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டில்லி – மும்பை இடையிலான துாரத்தை விட, குஜராத்தின் கன்ட்லா – ஈரானின் சாபஹார் துறைமுகங்களுக்கு இடையில் உள்ள துாரம் மிகவும் குறைவு. இரு நாடுகளுக்கு இடையே, புதிய, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதி வரும்போது, பாகிஸ்தானுக்கு செல்லாமல், ஈரான் வழியாக, ஆப்கன், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|