பதிவு செய்த நாள்
24 மே2016
08:01
புதுடில்லி : ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனைச் சேர்ந்த, ஆடை நிறுவனம், ஹென்னஸ் அண்டு மாரிட்ஸ்.இந்நிறுவனத்திற்காக, இந்தியா மற்றும் கம்போடியாவில் ஆடைகள் தயாரித்து தரும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள், பலவித கொடுமைகளுக்கு ஆளாவதாக, ஏ.எப்.டபிள்யு.ஏ., என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளில், குறைந்த ஊதியத்தில், கூடுதல் நேரம் பணிபுரிய நிர்ப்பந்திப்பது, கர்ப்பிணிகளை வேலைநீக்கம் செய்வது உள்ளிட்ட, சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக, புகார் கூறப்பட்டுள்ளது. டில்லியில், ஐந்து தொழிற்சாலைகளில், 50 பேர் மற்றும், கம்போடியாவின், 12 தொழிற்சாலைகளில், 201 பேர், தங்கள் துயரங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஹென்னஸ் அண்டு மாரிட்ஸ் நிறுவனம், இந்தியா, கம்போடியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, தொழிலாளர் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|